புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

செவ்வாய், 21 அக்டோபர், 2008

ஐ.டீ படித்துறை பாண்டி

காட்சி : 1 இடம் : பிராஜக்ட் சைட்
வழக்கம் போல எல்லா டீம் ஆளுங்களும் காலைல வந்ததும் மெயில் செக் பண்றது, ஷேர் மார்க்கெட் பாக்கறது, மார்க்கெட் நிலவரத்தை ரெம்ப டீப்பா டிஸ்கஸ் பண்றது, டீ குடிக்கறது, டீ குடிக்கற மத்தவங்கள கடிக்கிறது, டிஸ்கசன் பண்றேன்னு கும்பலா ரூம்ல கதவ சாத்திட்டு தூங்கறதுனு ரெம்ப ரெம்ப பிசியா இருப்பாங்க.
ஒரு சிலர் ஸ்க்ரீன்ல வெறிச்சு பார்த்திட்டு வேகமா டைப் பண்ணிட்டு இருப்பாங்க கிட்ட போய் பார்த்தா வேற என்ன சாட் தான்......இப்படியே டைம் பாஸ் பண்ணிட்டு ஒரு மூணு மணி வாக்குல தான் பாதி பேரு சுய நினைவுக்கு வருவாங்க மீதி பேரு தூக்கத்த விட்டு எழும்புவாங்க. .......ச்சே வொர்க்லொட் ரொம்ப ஜாஸ்தி..... ஐ.டீ ல வேலை பாக்கறது ரொம்ப டென்ஷன் பானு ஓவரா சலிச்சிக்குவாங்க.....

கட்சி : 2 நேரம் : ஆபிஸ் முடியும் நேரம்.
டீம் லீட் டீம் மெம்பெர்களை கூப்பிடுறாரு.......கைஸ்...வி வில் மீட் அட் 4.30

டீம் லீட் : வாட் ஹெபன்ட் டு தோஸ் டெவலப்மன்ட்ட்ஸ் ? (டீம் வழக்கம் போல முழிக்கிறார்கள் )
டீம் லீட் : ஓகே கம் வித் மீ ...( சொல்லிட்டு ரூம் விட்டு வெளிய வந்து பார்க்கிறார்)
(வெளியே ஒரு டெவலப்பர் உக்காந்து வேலை பாத்துட்டு இருக்கார்)
ஹே யு..... அவன்கிட்ட போய் ஒரு டெவலப்மன்ட் பண்ணனும்னு சொல்லிட்டு வா....
டீம் மெம்பர் : (டெவலப்பர் கிட்ட போய்) ஹாய்... சார் ஒரு டெவலப்மன்ட் பண்ண சொல்லறார்.
டெவ் : ஹே போப்பா எப்போ வந்து கேக்கற பண்ண முடியாது....
டீம் மெம்: சார் அவரு பண்ணமாட்டேன்னு சொல்லறார்.
டீம் லீட்: நான் சொன்னேன்னு சொன்னாயா ?
டீம் மெம் : (டெவலப்பர் கிட்ட போய் ) சார் பண்ண சொல்லறாரு பா
டெவ்: அவங்க அப்பன் வந்தாலும் பண்ண மாட்டேன்.

( டீம் லீட் டென்ஷன் ஆகி டெவலப்பர் கிட்ட வேகமா வந்து )
டீம் லீட் : நான் யாருன்னு தெரியும் ல....... டீம் லீட் யு நோ.....
டெவ்: டீம் லீட் எல்லாம் தெரியாது..... பங்க்சனல் ஸ்பெக் கொடுங்க.....அப்பத்தான் யாரா இருந்தாலும் டெவலப்மன்ட் பண்ணுவேன்....
டீம் லீட் : அய்யோக்கிய பயலே.....யாரை பார்த்து பங்க்சனல் ஸ்பெக் கேக்குற... நான் வாழ்க்கைல பங்க்சனல் ஸ்பெக் யாருக்கும் கொடுத்ததில்ல அப்படி கொடுத்தாலும் அதைவச்சு இதுவரைக்கும் டெவலப்மன்ட் எதுவும் நடந்ததில்ல....என்ன பார்த்து என்ன கேள்வி கேட்டுட்ட பிச்சு புடுவேன் பிச்சு.....ராஸ்கல்......
(என்று திட்டியபடி வேகமாக ரூம்க்கு போகிறார் பின்னால டீம் மெம்பர்ஸ் போறாங்க )
டீம் மெம்: என்ன சார் நீங்க அவன பண்ண வச்சுடுவிங்கனு பார்த்தோம் ஆனா இப்படி ஓடி வந்துட்டிங்க....
டீம் லீட்: இப்படி பப்ளிக்கா அவங்க கிட்ட பேசி பேசி அசிங்கப்பட்டது போதும்... டேய் இப்போ என்ன பண்றீங்க மெதுவா எட்டி பாருங்க.... அவன் லேப்டாப் ஓபன் பண்ணி வொர்க் பண்ண ஆரம்பிச்சான்னா அவன் நமக்கு அடிமை.......... மிட் நைட் வரைக்கும் அவன யூஸ் பண்ணிக்கலாம்.....இல்ல அவன் லேப்டாப் க்ளோஸ் பண்ணிட்டு கிளம்பினான்னா நாம அவனுக்கு அடிமை ...... போய் மொத்தமா கால்ல கைல உலுந்து அவனை கெஞ்ச வேண்டியதுதான்... ....
டீம் மெம்: இது உங்க ஆட்டைல புது ஆட்டையா இருக்கே சார்.......
டீம் லீட்: அதனால தான் நான் டீம் லீட்ஆ இருக்கேன் நீங்க எல்லாம் மெம்பரா எங்கிட்ட இருக்கீங்க போய் பாருங்க......
(டீம் வெளியே எட்டி பார்க்க டெவலப்பர் கடைய சாத்திட்டு கிளம்பிட்டு இருக்கறார் )
டீம் மெம்: சார் நீங்க சொன்ன மாதிரி அவன் கிளம்பிட்டான் சார்.....
டீம் லீட்: ஓடுங்க ஓடுங்க.... அவன உடாதிங்க.... எடுடா அந்த பொரைய.......பொரையும் ஒரு டீயும் கொடுத்து அவன மடக்குங்க.... ஓடுங்க.......
( டீம் லீட் சொல்லிக்கொண்டு டெவல்ப்பரை நோக்கி ஓட பின்னால் டீம் மெம்பெர்ஸ் ஆர் ஆல்சோ பாலோயிங்...... ஆஸ் யூசுவல்......)


இன்னும் வரும்.................. ஆனா........

திங்கள், 20 அக்டோபர், 2008

டென்ஷன் ஆன டெண்டுல்கர்

ரஞ்சி திரோபதியில் விளையாட காத்திருக்கும் விளையாட்டு வீரன் சச்சினை பார்த்தால்.. என்ன பேசுவாரு?


நம்மவர்(இளம் வீரர்): நிறுத்தனும்
சச்சின் : எத?
நம்மவர்(இளம் வீரர்): கிரிக்கெட் விளையாடுறத.
சச்சின் : ஏன்?
நம்மவர்(இளம் வீரர்): நான் விளையாடனும்.
சச்சின் : சரி போய் விளையாடு..
நம்மவர்(இளம் வீரர்): இந்தியா நாட்டுக்காக விளையாடனும்.
சச்சின் : இரு இருபது வருஷம் வெயிட் பண்ணு நான் ரிட்டயர்ட் ஆயிடுறேன்.
நம்மவர்(இளம் வீரர்): அப்போ நான் ரிட்டயர்ட் ஆயிடுவேன்
சச்சின் : என்ன என்னா பன்ன சொல்ற?
நம்மவர்(இளம் வீரர்): போதும்!
சச்சின் : என்ன போதும்!!
நம்மவர்(இளம் வீரர்): நீ பன்ன ரெகார்ட் லாம் போதும்..
சச்சின் : என் பொண்டாட்டி அடிப்பா.
நம்மவர்(இளம் வீரர்): அப்போ உன்னவிட வயசுல சின்ன பொண்ண பார்த்து கட்டி இருக்கணும்.
சச்சின் : முயற்சி பண்றேன்.. !!
நம்மவர்(இளம் வீரர்): அவங்கள போக சொல்லு!
சச்சின் : எவங்கள ?
நம்மவர்(இளம் வீரர்): பையனா டீம் ல சேந்து, அங்கிளா அசிங்க பட்டு, தாத்தாவ இருக்காங்களே உன் டீம்ல அவங்கள..
சச்சின் : அவங்கள்ட போய் நான் ஏன் சொல்லணும்.?.
(எங்க கிட்டயேவா)
நம்மவர்(இளம் வீரர்): என்ன சொல்லணும்?
சச்சின் : அவங்க கிட்ட போய்.. !@#!
நம்மவர்(இளம் வீரர்): என்ன அவங்க கிட்ட போய்..?
சச்சின் : டீம் பத்தி பேச வேணாமா?
நம்மவர்(இளம் வீரர்): என்ன டீம் பத்தி?
சச்சின் : என்ன விற்று நான் பார்த்துக்குவேன்..
நம்மவர்(இளம் வீரர்): என்ன என்ன விற்று?
சச்சின் : சரி சிக்ஸர் அடிசிருகிய?
நம்மவர்(இளம் வீரர்): என்ன சிக்ஸர் அடிசிருகிய?


இப்போ அவுரண்டா அவன் ரிட்டயர்ட்...

ஞாயிறு, 19 அக்டோபர், 2008

கூகிள் என்றால் என்ன ?

"Googol" is the mathematical term for a 1 followed by 100 zeros.
கூகிள் பெயர் காரணம் - கூகோல் என்றால் ஒன்றுக்கு பிறகு நூறு பூசியங்களை கொண்ட எண்ணை குறிக்கும்.
கூகிள் தேடுதலுக்கு சரியான பேருதான் வச்சிருக்காங்க இல்லையா ?

புதன், 15 அக்டோபர், 2008

குஷ்பு பிறந்த நாள் - தேசிய விடுமுறை




பிறந்த தேதி : செப்டம்பர் 29, 1970 : திரையுலகில் எத்தனையோ கதாநாயகிகள், கவர்ச்சிக் கன்னிகள் வந்துபோனாலும் தமிழ் ரசிகர்கள் கோயில் கட்டியது குஷ்புவுக்கு மட்டும்தான்.



'வருஷம் 16'ல் தொடங்கி பல வருஷங்கள் தமிழ் படவுலகில் 'நம்பர்-1' நாயகியாக திகழ்ந்த இவர், தற்போது சின்னத்திரையில் ரொம்ப பிஸி. திரையுலகில் கனவுக்கன்னி யாக பல பேர் பேர் தூக்கத்தை கெடுத்து ...... சின்னத்திரையில் உண்மையிலேயே வீட்டில் இருப்போரை தூக்கத்தை கெடுத்து சாதனை புரிந்த குஷ்பு பிறந்தநாளை அடுத்த வருடம் தேசிய விடுமுறையாக அறிவிக்கும்படி .... எல்லோரும் பிரதமருக்கு தந்தி அனுப்பும்படி கேட்டுகொள்கிறோம்......



இப்படிக்கு



கும்மாளம் குஷ்பு பேரவை.



மானாட மயிலாட குஷ்பு & ரம்பா ஜொள்ளு சேவா சங்கம்.





செவ்வாய், 14 அக்டோபர், 2008

மேதை படத்தின் கதை சுருக்கம்......

ராமராஜன் இந்த படத்தில் இன் அண்ட் ஆஸ் மேதையாக நடிக்கிறார் இல்லை வாழ்கிறார்......
மேதை ஒரு குக் குக் கிராமத்தில் பிறந்து வளர்கிறார்......அவருடைய அறிவை கண்டு சுத்துப்பட்டு பதினெட்டு கிராமங்களும் வியக்கிறது..... அவருக்கு பதினெட்டு வயதாகும் போது அவரே ஊரில் ஒரு கல்லூரி அமைக்கிறார்.... அவர் தான் பிரின்சிபல், புரொபஸர், எல்லாம்..... ஓய்வு நேரத்தில் கல்லூரி ஆய்வு கூடத்தில் அராய்ச்சி செய்து ஒரு புதிய பொருளை கண்டுபிடிக்கிறார்.....
இதற்கு இடையே முதலாண்டு படிக்கும் குப்பம்மா, குருவம்மா, போன்ற அழகிகள் அவரை லவ் பண்ணுகிறார்கள்.....


ரெண்டு குத்து சாங்க்ஸ்......

ஆனால் மேதை பக்கத்து ஊரு நாட்டமை பொண்ணை (நைன்த் பெயில்) காதலிக்கிறார்.... பக்கத்து ஊரு நாட்டாமை மகனும் இவரை போலவே கல்லூரி ஆரம்பித்து போட்டி போடுகிறார் ...இவரது கண்டுபிடிப்பு பார்முலாவை திருடி கொண்டு பிச்சாவரத்துக்கு ஓடுகிறார்.....

நாலு பைட் ........

கப்பல், விமானம், ராக்கெட் சேசிங் சீன்ஸ் உண்டு.

அதை வில்லன் இடமிருந்து கைப்பற்றி மேதை தன்னுடைய கண்டுபிடிப்பை ஐ.நா சபையில் நிருபித்து காட்ட ஜெனிவா போகிறார் அங்கே காட்டெருமை இவரை விபத்தில் இருந்து காப்பற்றுகிறது... இங்க ஒரு சாங்.....(பேச்சி...பேச்சி என் எருமை உள்ள பேச்சி .....வாடி வாடி .....காட்டெருமை பேச்சி) பிறகு .......

ஐ.நா சபையில் கண்டுபிடிப்பை ஓபன் செய்கிறார்........ அனைத்து நாட்டு அறிஞர்களும் ஆச்சரியத்தில் வையடைத்து போகிறார்கள்..... அப்போது திடீரென்று இண்டேர்போல் போலீஸ் வந்து மேதையை கைது செய்கிறது......(எதற்கு என்று கிளைமாக்ஸ்ல தான் தெரியும்)
ஜெயிலிலும் அவர் தன் ஆராய்ச்சியை தொடர்கிறார்......

அதற்காக கிருஷ்ணா புராணம், ராமாயணம், மகா பரதம், கந்த சஷ்டி கவசம், மருதம், சரோஜா போன்ற அறிவியல் நூல்களை அட்டை டூ அட்டை படிக்கிறார்......
அவர் ஜெயிலிலிருப்பதை கேள்விப்பட்டு ஊரு நாட்டாமை பதினெட்டு பட்டி மக்கள், முதலமைச்சர், பிரதமர், ஜனாதிபதி உட்பட எல்லாரும் கூடி உண்ணாவிரதம் இருக்கிறார்கள்...............
இங்கே உலகையே உருக்குற மாதிரி ஒரு தீம் மியூசிக் தினா போட்டுருக்கிறார்

( இதற்க்கு அவருக்கு கண்டிப்பா ஆஸ்கார், மாருதி கார், எல்லாம் கிடைக்கும் )
கிளைமாக்ஸ் காட்சியில் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க இண்டேர்போல் அவரை விடுதலை செய்ய...

"வாங்கையா மேதை அய்யா ...........

உங்க வலி பார்த்து நின்றோம் அய்யா...... "

என்று மக்கள் பாட்டு பாட தியேட்டரில் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டுவார்கள்...... (தாய் குலங்களின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் ஓடும்)
அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஜெயிலில் தள்ளிய கண்டுபிடிப்பு தான் என்ன என்று மேதையை கேட்க பெட்டியை திறந்து அதை வெளியே எடுத்துகாட்ட ............ அவர் காட்டியது வேறொன்றும் இல்லை.....'மௌஸ்' (எலி)....... இந்த கருவியை பயன்படுத்தி கீ போர்டு இல்லாமல் மௌஸ் பாடில்... அதன் மூஞ்சியை தேய்த்தால் கர்சர் நகரும் என்ற கண்டிபிடிப்பை......... பார்த்து பொறாமை பட்டு அமெரிக்காவின் சதியால் என்னை ஜெயிலில் அடைத்தார்கள்.... என்று சொல்ல.......முதலமைச்சர், பிரதமர், ஜனாதிபதி உட்பட எல்லாரும் மயங்கி போகிறார்கள்.......
இந்த மாபெரும் சயன்ஸ் பிக்க்ஷன் படத்துக்கு கண்டிப்பாக நோபல் பரிசு கிடைக்கும் என்று வெளிநாட்டு தூதுவர் ரகசிய தகவல் சொன்னதாக மேதை ராமராஜன் எருமையுடன் ச்சே....பெருமையுடன் கூறினார்.
பின் குறிப்பு : இது வெறும் கதை சுருக்கமே முழு கதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அல்லது தைரியம் உள்ளவர்கள் வெள்ளி திரையில் காண்க .


முன் எச்சரிக்கை : இந்த படம் ரிலீஸ் ஆனால் ராமராஜன் தேர்தலில் போட்டியிட்டு முதல்வர் ஆகக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சின்னாளபட்டி சிட்டு குருவி ஜோஷியர் கூறியிருப்பதாக ராமராஜன் அகில உலக ரசிகர் மன்ற செயலாளர் அரைக்கால் டவுசர் அப்புசாமி பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி நான் வர முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்க முடியாது.......


"நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

அப்படி நான் வர முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்க முடியாது.....! "

எப்படி பன்ச் டயலாக் நல்லாருக்கா ? இது அரசியலுக்கு வரவழைக்க முயற்சித்து ரசிகர்கள் செய்த அடாவடி கூத்துகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக தலைவர் கொடுத்த பன்ச் டயலாக் ஆச்சே.........
அண்ணே..... ரசிகர்கள் அப்படி என்ன அடாவடி செஞ்சாங்க ?
என்ன சும்மா.....லட்ச கணக்குல கை காச போட்டு

<>அவரு பெயரில் கட்சி.

<>கட்சிக்கு கொடி, சின்னம்.

<>தமிழ் நாடு முழுவதும் போஸ்டர்.


இப்படி சின்னதா(!?) தலைவருக்கு அவங்க ஆர்வத்த காட்டினாங்க.....


இதெல்லாம் ஒரு நாளோ இல்ல ஒரு வாரத்திலோ முடியற மேட்டர் இல்லையே...


ஆமாடா.....ஆனா.......இவ்வளவு நடந்து முடியற வரைக்கும் தலைவருக்கு எதுவுமே தெரியாது பாவம்.......


பின்ன அவருதான் வெளி நாட்டுல 'ஐஸ்' போட்டு ஜூஸ் குடிச்சிட்டு எந்திரத்தனமா சூட்டிங் ல பிசியா இருக்காரே.........


ரசிகர்களை மீட் பண்றேன் மீட் பண்றேன்னு சொல்லிட்டு அவரு பாட்டுக்கு அவரு வயித்து பொழப்ப பாக்கறாரு.....இந்த பொழப்பத்த அப்பாவிங்க அவர நம்பி என்ன என்னமோ கனவு கண்டுட்டு இருக்காய்ங்க......(எல்லாம் அவனவன் ஆட்டைய போடத்தான்)...


அவரு எப்போ மீட் பண்றேன்னு சொன்னாரு...... இதுக்கு முன்னால எடுத்த படம் கும்ம்னு குத்தவச்சு..குப்ரடிச்சி கும்மியாடிசிடுச்சி இல்ல......அதனால ரசிகர்கள உற்ச்சாகபடுத்த அப்படி சொன்னாரு அதபோய் தப்பா எடுத்திட்டு இப்படி பண்ணலாமா? ( அடுத்த படத்துக்கு பாலு ஊத்தணும் இல்ல)

இருந்தாலும் அவரு அரசியலுக்கு வர்றதபத்தி மறுபடியும் குழப்பக் கூடாது......

டேய் லொள்ளு தலையா.....நீ என்ன குட்டையா குழப்பறதுக்கு...... அவரு உன்ன என்னடா கொழப்பிட்டாரு ?

இல்லண்ணே.....ஒண்ணு வரேன்னு சொல்லணும் இல்ல வரலைன்னு சொல்லணும்.... இப்படி ரெண்டுங்கெட்டானா பன்ச் டயலாக் சொன்னா நாங்க எல்லாம் என்ன பண்றது... ?


ம்ம்ம்....ரெண்டு இட்லியும் கொஞ்சம் கெட்டி சட்னியும் வச்சு தின்னு........ அவங்க அவங்களுக்குன்னு சுயமா சிந்திக்க செயல்பட உரிமை இருக்குல்ல..... அவரு சிந்திக்கிறாரு அவரு தெளிவா இருக்காரு........ உனக்கெல்லாம் எப்பதான் அறிவு வருமோ....!!! அவரு கொளப்பறார்.....அவரு கொளப்பறார்....என்று....கூப்பாடு போடற உன்னமாதிரி மடையனுங்க எப்பதான் திருந்தி இருக்கறவங்கள கொளப்பாம இருக்கபோறீங்க.......


தமிழ் நாட்ட அவரு அரசியலுக்கு வந்தாதான் காப்பத்த முடியுமா? இல்ல தமிழ் நாட்ட நடிகர்கள் மட்டும் தான் காப்பத்த முடியுமா....என்னடா இது கேனத்தனமா இருக்கு.......

சினிமா ஒரு தொழில் தானடா..... நீ டீ கடைல வேலை பாக்கிறா மாதிரி, ஸ்கூல் ல வாத்தியார் வேலை பாக்கற மாதிரி, கூலி வேலை பாக்கற மாதிரி அதுவும் ஒரு வேலை தானடா..... நீ ஒரு கூலி தொழிலாளியை அரசியலுக்கு கூப்பிடுவியா? வாத்தியாரை அரசியலுக்கு கூப்பிடுவியா? சரி.....இவரு ஆட்சிக்கு வந்தா பட்ஜெட் எப்படி போடுவாரு, திட்டம்னா என்னன்னு தெரியுமா? ......


அதெல்லாம் அதிகாரிகள் போடுவாங்கன்னே.........

அப்போ இவரு என்ன பண்ணுவாரு அவங்களுக்கு விளக்கு பிடிப்பாரா? அதுக்கு ஏண்டா அவரு வரணும் .....நான் , நீ, இந்த நாட்டுல இருக்குற யாரு வேனாலும் வரலாமே......


அடுத்த தலைமுறையாவது திருந்தட்டும்டா.......... பல நாடுகள்ல சினிமாவே இல்லை....அதனால அங்கே அரசியலே நடக்கறதில்லையா? இல்ல அங்கெல்லாம் நல்லாட்சி நடக்கலையா?


போயி....பொழப்ப பாருங்கடா......குழந்தை குட்டிகள படிக்கவைங்கடா......குடும்பத்த மொதல்ல காப்பத்த முயற்சி பண்ணுங்க அப்புறம் நாடு, நடிகர்களை எல்லாம் பார்க்கலாம்........


வாழ்க தமிழ்.....

ஜெய்ஹிந்த்.....

இந்த மானம் கெட்ட முதுகெலும்பு இல்லாத கிரிகெட் டீம் தேவையா.........

இதை போல ஒரு கேவலமான ஆட்டத்தை பார்க்க முடியாது........ இருநூத்தி தொன்னூத்தி ஒம்பது ஒரு கடினமான இலக்கா.....அப்போ ஐம்பது ரன் இலக்காக இருந்தால் ஜெயிதிருபார்களா........
இதில் கவாஸ்கர் பெருமை வேறு.......
டெண்டுல்கர் மேட்ச் வெற்றிக்காக ஆடினாரா? அவருடைய சாதனைக்காக ஆடினார்.....ஆட்டம் இழந்த பொது அவரின் முகத்தை பார்த்திருந்தால் நன்றாக புரியும்..... இதுவே அணி தோல்வி அடைந்திருந்தா கூட அப்படி கவலை பட்டிருக்க மாட்டார்.....

ஆட்ட இறுதியில் பாண்டிங் சொன்னது போல இந்தியா வெற்றிக்காக ஆடவில்லை....டிரா செய்யத்தான் ஆடினார்கள்....."நெகடிவ் திங்க்கிங்" என்று அவர் சொன்னது நூறு சதம் உண்மை........

இந்த மானம் கெட்ட முதுகெலும்பு இல்லாத கிரிகெட் டீம் தேவையா.........
ஏன் எல்லோரையும் தூக்கி எறிந்துவிட்டு உண்மையிலேயே விளையாடுபவர்களை டீம் ல சேர்க்க வக்கில்லையா..... கங்குலி எப்படி டீம் ல வந்தாரு ? வெட்கமா இல்லை ...!!!
கிழட்டு கும்ப்ளே, கஜினி லக்ஷ்மன், குட்டிசெவுறு டிராவிட் , செல்பிஷ் டெண்டுல்கர் இவங்க மட்டும் தான் கிரிகெட் விளையாட பொறந்தாங்களா ?
இல்லை இது
கவர்மன்ட் வேலையா அறுபது வயசு வரைக்கும் விளையாடிட்டு இருக்க? இவங்க ஆடினா தான் மக்கள் பார்ப்பாங்க இல்லனா டிவி எல்லாம் ஆப்ப் பண்ணி வச்சிடுவாங்க ....ஸ்டேடியத்துல யாரும் டிக்கெட் வாங்கி மேட்ச் பார்க்க மாட்டங்களா?

இந்த மானம் கெட்ட முதுகெலும்பு இல்லாத கிரிகெட் டீம் தேவையா.........
இப்போ புரியுதா ஏன் இவனுங்க ஐ.சி.எல் வரகூடாதுனு தடுக்கரானுங்கனு.......ஐ.சி.எல் வந்தா விளையாட தெரிஞ்சவங்களுக்கு மதிப்பு கிடைச்சு இவங்களை எல்லாம் இதே மக்கள் காறி மூஞ்சில துப்பும்ல....

செவ்வாய், 7 அக்டோபர், 2008

ஹலோ துபாயா!!

நமது கன்ஸல்டண்டும் கிளைன்டும் பேசிகொல்கயில்...
நம்மவர் : ஹே மண் ஹொவ் ஆர் யு? (ஆனா யாருன்னே தெரியாது)
கிளைன்ட்: யா அம் பைன். ஹொவ் அபௌட் யு? பை த வே, வாட் ஆர் யு?
நம்மவர் : நான் ஒரு முல்டி பங்சனல் காங்சுல்டன்ட். (வெள்ளகாரண்ட தமிழ் )கிளைன்ட்: வாட் ஆர் யு சேயிங்? வாட் இஸ் யூர் நேம்?
நம்மவர் : மை நேம் இஸ் நாட் ...இஷ்ஊஊஊ ........ இ அம் மார்க்.. பிரம் துபாய்.. கிளைன்ட்: ஓ...
நம்மவர் : யு சி... ஐ ஹவே பதினெட்டு இயர்ஸ் ஆப் எஸ்பிரியந்ஸ்!!
கிளைன்ட்: வாட் ஆர் யு சேயிங்?
நம்மவர் : எனி ப்ரோப்லேம் காண்டாக்ட் மீ எனி டைம்.
கிளைன்ட்: யு ஆர் எ யுஸ்லெஸ் மேன்..
நம்மவர் : யா யு கேன் யுஸ் மை மொபைல்..
கிளைன்ட்: ஜீச்ஸ் கிறிஸ்ட் ..
நம்மவர் : நோ, ஐ அம் ஹிந்து..
கிளைன்ட்: @%$@#$!@#$!@#$.

அப்புறம் என்ன அடுத்த ஆளு தான்.. (ஆஆஆஆஆஂஂஂஂஂஂஂஂஂஂஂஂஂவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

திங்கள், 6 அக்டோபர், 2008

திருந்த இதுதான் சரியான நேரம்...

மக்கா..........தேர்தல் வருது..........நாடகங்கள் அரங்கேற தொடங்கியாச்சு....... முழிச்சிக்கோங்க..... அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் , திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி , விடுதலை சிறுத்தைகள், தேசிய மக்கள் முன்னேற்ற கழகம் , காங்கிரசு ..............இப்படி முன்னேற்ற கழகங்கங்களும், கட்சிகளும் தங்கள் தேர்தல் வியூகங்களை ரூம் போட்டு , வீடு கட்டி , தண்ணி போட்டு யோசிக்க ஆரம்பிச்சாச்சு........ இதுல நடுவண் அரசுக்கு என்ன கூட்டணி மாநில அரசுக்கு என்ன கூட்டணி, யாரு காசு அதிகமா கொடுப்பா ...... ஒன்னு வாங்கினா ரெண்டு இனாமா கிடைக்கற மாதிரி எதை விட்டு கொடுத்து (மானம் மரியாதை உட்பட ) எதை பெருவதுனு ரெம்ப ஆலோசனை நடத்திட்டு இருக்காங்க....... ஒருத்தனை ஒருத்தன் பள்ளி குழந்தைகளை போல குறை சொல்லுவது .....ஒருவன் மீது ஒருவன் சேற்றை அள்ளி வீசிகொள்வது என்று அரசியலில் சகஜம் என்று ஆகிவிட்ட காரியங்கள் அருமையாக நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது..............

இப்போது இருக்கும் தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் எல்லாருக்கும் எல்லாரை பற்றியும் நன்றாக தெரியும்.........இது அரசியல் வாதிகளுக்கும் தெரியும் ...........அதனால் தான் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு " டெலிவிசன் ரேட்டிங் பாய்ண்ட் " பெறுவதற்காக என்ன என்ன விளம்பர உத்திகளை கையாளுகிறார்களோ அதை போல .....சில்லரை தனமான உத்திகளை கையாண்டு இடங்களை பெறுவதில் தொடங்கி ஓட்டுவாங்கி ஆட்சியை பிடிப்பது வரை முழுக்க முழுக்க வியாபாரமாக செய்கிறார்கள் ............ சோப்பு விளம்பரம் , ஆடை விளம்பரம் போல நடிகைகளை , நடிகர்களை வைத்து விளம்பரம் செய்வது ......சில நடிகர்களை (அசிங்கமாக) பேச வைத்து விளம்பரம் செய்வது ......சண்டை போடவைத்து விளம்பரம் தேடுவது ......... என தொடங்கி அவர்களை கட்சி ஆரம்பித்து ஆட்சியை கையில் கொடுக்கும் வரை எல்லா கொமாளிதனங்களையும் செய்தாகிவிட்டது........போதும்....... யாருக்கும் யாரும் சோறு போட முடியாது உன்னுடைய சோறு உன் உழைப்பால் மட்டுமே கிடைக்கும் .................. திருந்துங்கள் .....யோசியுங்கள்.....

ஏன் நீங்களோ இல்லை உங்கள் குடும்பத்தாரோ வேலைக்கு போக வேண்டும் ? ....... பிழைப்புக்காக
ஏன் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க வேண்டும் ?........ பிழைப்புக்காக...
ஏன் ரஜினி காந்த் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் ?...... பிழைப்புக்காக
ஏன் கவியரசர் கவிதை எழுதவேண்டும் ?......... பிழைப்புக்காக
ஏன் ஷங்கர் படம் எடுக்க வேண்டும் ? .......பிழைப்புக்காக
ஏன் நானோ நீங்களோ கட்சி கோடி பிடிக்கவேண்டும் ? .....பிழைப்புக்காக

இப்படி நீங்கள் உங்களை கேள்வி கேட்டுபாருங்கள் ......

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றுதான்...... உங்கள் ஊரில் யார் நல்லவர் ?
சட்ட சபை உறுப்பினர் வேலையை யார் ஒழுங்காக பார்ப்பார்? .......
உங்கள் தொகுதிக்கு என்ன செய்யவேண்டுமோ அதை யார் செய்வார் ? என்று பார்த்து ஓட்டு போடுங்கள் ........
அவர் எந்த கட்சி ஆகா இருந்தாலும் பரவாயில்லை ............ ஆளும் கட்சியானாலும் எதிர் கட்சி ஆனாலும் தொகுதிக்கு செய்யமுடியும் ....... எடுத்துகாட்டுகள் கொடுக்கலாம் ஆனால் கட்சி சார்பாக ஆகிவிடும் ...........அரசியல் வாதிகளை உண்மையிலேயே சிந்திக்க வைக்க செயல் பட வைக்க இதுதான் ஒரே வழி .. எனவே சிந்தியுங்கள் ....... நாம் பட்டது போதும் ...திருந்துங்கள் ......மாற்றத்தை ஏற்படுத்துங்கள் ..... நமது சந்ததியாவது அனுபவிக்கட்டும் உண்மையான சுதந்திரத்தை!

ஞாயிறு, 5 அக்டோபர், 2008

பிளாண்டுக்கு போறேன்.... பிளாண்டுக்கு போறேன்......பிளாண்டுக்கு போறேன்.......

ஏய் நானும் பிளாண்டுக்கு வறேன்பா.......

வேண்டாம் நீயெல்லாம் அங்க வந்து என்ன பண்ண போற ....... நீயெல்லாம் இங்க இருக்காதே சும்மாதான் இதுல பிளாண்டுக்கு வந்து நாறடிக்கனுமா...........

ஏய் இல்லப்பா இங்க நானும் கன்சல்டன்ட்னு நல்லா பார்ம் ஆகிடேம்ப்பா.... நானும் ஏறிக்கறேன்.....(ஜி எம் சி வண்டியில் ஏற போட்டி போடுகிறார்)

ஏய் கோமாளி நீ பார்ம் ஆயிட்டா உன்ன கன்சல்டன்ட்னு ஒதுக்கனுமா போடா அங்கிட்டு....(டிரைவர் தள்ளி விடுகிறார்)

ஏய் ஏப்பா இப்ப கன்சுல்டன்ட்ஸ் கூட சரிக்கு சரி நின்னு பேசினத பாக்கலையா......... நானும் கன்சல்டன்ட் தான்யா.....அட இந்தாருயா....விடுயா ஏறிக்கறேன்......

டேய் வெண்ண நீ அவிங்க கிட்ட சரிக்கு சரி நின்னு பேசினா நீ பெரிய கன்சல்டன்ட்டா.....போயிரு.......... செக்யூரிட்டி ல பிடிச்சி கொடுத்துடுவேன்......

(அப்படி இப்படி முட்டி மோதி உள்ளே நுழைந்து கொள்ள வண்டி புறப்படுகிறது..... )நம்ப
ஆளும் வெளியே தலை கைய்ய நீட்டி........ஆட்டிகிட்டே........

ஏய்....நான்......பிளாண்டுக்கு போறேன்......பிளாண்டுக்கு போறேன்.....பிளாண்டுக்கு போறேன்......... நல்லா பாத்துகுங்க நான் பிளாண்டுக்கு போறேன்...........

செவ்வாய், 30 செப்டம்பர், 2008

விசாரணை விவரங்கள்:

சிங்கத்தை சாய்த்த்து யார் என்ற விசாரணையில், இது ஒரு பர் துபாய் குறுக்கு சந்துல் வசிக்கும் ஒருவர் என கண்டுபிடிக்க பட்டது. மேலும் இவர் கொடுர பயங்கர வாதி என்றும். பொங்கல் போடுவதில் பெரிய ஆல் என்றும் கண்டுபிடிகபட்டது. சிங்கம் வெளி இட்ட பயோடேட்டா விற்கும் இதற்கும் நிறைய பொருத்தங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் விளம்பர இடைவேளைக்கு பிறகு.

சனி, 27 செப்டம்பர், 2008

Flash News: சிங்கம் சாய்க்கப்பட்டது

தலைவனுக்கு தலைவனா,  தொண்டனுக்கு தொண்டனா, சப்போர்ட்டுக்கு சப்போர்ட்டா, அதுக்கு அதுவா, இதுக்கு இதுவா இருந்த எங்க சிங்கத்த சாச்சி புட்டானுக..
ஒரு வேளை இது வெளி நாட்டு சதியா இருக்குமோ... 
இதனால் அமெரிக்கா, பிரிட்டின், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள்ல விசாரணைக்கு உத்தரவிடபட்டுள்ளது.. 

 தொடரும் ..

வெள்ளி, 26 செப்டம்பர், 2008

பய டேட்டா : காக்கா கபாலி

அட இவ்வளவு நல்லவரா இவரு.........எங்க இருக்காரு....பக்ரைன் ஆ? அபுதாபியா ? பர்ர் துபாயா ?

அட இல்லப்பா நம்ம பன்னாரி மாரியம்மன் கோயில் ல கூழ் ஊத்தராருப்பா.....

ஒஹ் ஹோ ..... நான் கூட வெளி நாட்டு தூதுவர்னு நினைச்சேன்......

டேய் என்னடா எதோ பய டேட்டா போடறேன்னு சொல்லிட்டு எதோ உளறிட்டு இருக்க.......

இல்லைங்ன்னே சும்மா ஒரு டிபரன்ட்டா இருக்கட்டுமேனு எழுதினேன்......

நிறுத்திக்கோ இதோட நிறுத்திக்கோ..........இல்லனா.........ரெம்ப குஷ்டம் ச்சே கஷ்டம்.......

அப்போ என்ன தான்னே எழுதறது?

எதையாவது பொதுவா எழுது...... சினிமா பத்தி எழுது சினிமா நடிகர் பத்தி எழுது......

அண்ணே....நடிகைய பத்தி எழுதலாமா........

ஆரம்பிச்சிட்ட இல்ல உன்னால லந்த கொடுக்காம இருக்க முடியாதா?

அதானே லந்து மணி.......

இப்படியாக சில பல விவாதங்களுக்கு பிறகும்......முதல் பய டேட்டா ரத்தக்களரியை பார்த்த பிறகும்......லந்துமணி தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் அடுத்த டாபிக்கை தேடி தன் பாதையில் விரைவாக பயணித்தார்........

(தொடரும்.....)

வியாழன், 25 செப்டம்பர், 2008

லந்துமனியின் டயரி

எதுக்கு இப்போ தனியா பதிவு ஆரம்பிகறீங்கனே........ டேய்.. blogg தலையா .நமக்குன்னு தனியா வண்டி இருந்தா நாம எப்படி வேணும்னாலும் ஓட்டலாம் இல்லையா..... அப்போ ஓட்டறதுன்னு முடிவு பண்ணிடீங்கலான்னே..... ஆமாண்டா.....நீயும் எதாவது பதிவுகள அப்பப்போ போட்டு தாக்கு..... அப்பப்போ என்னன்னே....டெய்லியும் போட்டுட்டா போச்சு...... டேய் வாய்க்கு வந்தத பேசுரமாதிரி கைக்கு வந்தத எல்லாம் எழுதற எடம் இல்லடா இது.... நீங்க சும்மா இருங்கனே.....மைக்க பிடிச்சா வாய்க்கு வந்தத தான் பேசணும் ....கீ போர்ட எடுத்தா கைக்கு வந்தத எல்லாம் அடிக்கனும்னே.......... அப்போ ஒன்னு பண்ணு நீயே ஒரு பதிவு ஆரம்பிச்சு அதுல உன் வித்தைய காட்டு... கொவிச்சுக்காதீங்கனே.......இதுலையே எழுதறேன்...... அப்போ நம்ம ரூல்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணனும் ஓகே........ ஓகே...னே...........

புதன், 24 செப்டம்பர், 2008

பய டேட்டா - சவடால் சங்கரு

பய ( ங்கர ) டேட்டா
பெயர் - முண்டாசு முருகேஷ்

வயது - பாடம் சொல்லி குடுத்த வாத்தியார மறக்காம பத்து வருஷமா காலேஜ் போற வயசு .

புதிய தொழில் – முண்டாசு கட்டி காத மரசு ஒட்டு கேட்குறது .

உப தொழில் – ஊருல இருக்கறவன் எத பேசினாலும் ஓடி போய் கேட்பது.

முன் அனுபவம் - "ஓவர் பில்டப்" ல Ph.D , "கவுக்கரதுல" M.Phil, அவரா அசிங்க படுறதுல அவ்வுளவு கெட்டி காரர் ,

நண்பர்கள் – அத எப்படி என் வாயால....

எதிரிகள் – தின்பண்டம் குடுகாதவர்கள்.

பிடித்த இடம் – ஆபீஸ்..

பிடித்த வேலை – அடுத்தவங்களை நோட்டம் போட்டு அலப்பரைய கொடுப்பது

தற்போதைய பொழுதுபோக்கு – ஆப்பிள் சாபிடுவது.

எதிர்கால பொழுதுபோக்கு – கொய்யாகாய் சாப்பிடுவது.

விரும்புவது – இவரு மட்டும்தான் எல்லாத்தையும் கலட்டுனாருனு

வெறுப்பது – கொடுக்காமல் சாப்பிடுபவர்களை

மறந்தது – பலரிடம் அடிவாங்குவதை

மறக்காதது – அடி வாங்கியதை

எரிச்சல் -- சமீபத்தில் நடந்த தும்பயியல் சம்பவம் .

ரசித்தது – அப்படிஎல்லாம் ஒன்னும் இல்லிங்கோ

ரசிக்காதது – மூஞ்சிக்கு நேரா பேசி அசிங்கபடுத்துவதை

ஒரே சாதனை – இரண்டு வருட காலம் ஒரே வேலையில் இருந்தது

சமிபத்திய சாதனை – பார்த்தவுடன் டக் என ஆட்களை தெறித்து ஓட செய்வது.

நீண்டகால சாதனை – சத்தமாக சிரிப்பது

செவ்வாய், 23 செப்டம்பர், 2008

லந்து மணியின் அறிமுகம்

ஹாய் லந்து பார்டீஸ்..........

நான் லந்து மணி .....எங்கும் எதிலும் எப்போதும் லந்தை கொடுக்க.... உங்களுக்காகஅவதாரம் எடுத்த ஒரு லந்து பார்டீ......

நம்ம கும்மாளம் நண்பர்கள் கும்மியடிக்க என்னை ஆர்வமாய் அழைத்தார்கள்....
சரி எவ்வளவோ பண்ணிட்டோம் ....இத பண்ண மாட்டோம்னு......கிளம்பி.... லந்துடேன்....ச்சே....வந்துட்டேன்......

'வீனா....'சுனா......இப்ப.....சந்தோஷமா........ எண்ணா....வில்லத்தனம்........

கூட்ட்டமா சேர்ந்து கும்மியடிக்க ......ஆரம்பிச்சா.....எவன் மட்டுனாலும் டவுசரகலட்டி கை விளங்க போட்டுடுவிங்கள்ள.......

அதுக்குன்னு அவர நீங்க அப்படியெல்லாம் செஞ்சிருக்க கூடாது......நைட் எல்லாம்தூங்காம அழுதுட்டு இருந்தாரம்....எங்கிட்ட ரெம்ப வருத்தப்பட்டாரு......

அய்யோ..... அய்யோ.....

வரட்டுமா.......

ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

இது தான் உசுபேத்துறதுதா !!

நமது 10435 வது ஜ கே ரிதீஷ் ரசிகர் மன்ற ஜெட்டா கிளைய பிடிக்காத ஒருத்தரு.. காக்கா கபாலி கிட்ட போய், நீங்க என் சினிமா ல நடிக்க கூடாது .... ரஜினி கமல், விஜய் அஜீத், ஜ கே ரிதீஷ் காக்கா கபாலி அப்படின்னு சொல்லி இருக்காரு... இத கேட்டுட்டு ஒரெ குஜால் மூடு தான் நம்ம காக்கா கபாலி.. ஹீரோயின் ஆ யார போடுறதுன்னு யோசிக்கிராருனா பாருங்களேன்...

சனி, 13 செப்டம்பர், 2008

காக்கா கபாலி

ஒரு அறிமுகம்.....

இனிமேல் இவர் தான் நம்ம கொமெடி கதாநாயகன்........காக்கா னு பேருவந்தது எப்படின்னா......... இவரு கலரு பிளஸ் காக்கா பிடிக்கறதுல பெரிய ஆளு......இன்டர்நேஷனல் லெவெல்ல "அகில உலக காக்கா" அவார்ட்எல்லாம் வாங்கிருக்கார்.........

கபாலி என்பதும் அவர் வாங்குன பட்டம் (படிக்காம )தான்...... கபாலி போடருதுனா........எவனாவது சிக்குனா பெட்ஷீட் போட்டு ரவுண்டுகட்டி அடிக்கறது............
அதுசரி.......இவருக்கு எப்படி இந்த பேருன்னு யோசிக்கறீங்களா.................

இவரும் எவனாவது சிக்குனா அவன்கிட்ட பத்து பைசா இல்லாம உருவிகிட்டு உட்டுடுவாறு...அதனால நம்ம ஹீரோவ பார்த்தா அவனவன் துண்டைக்கானோம் பர்ஸை காணோம்னு தெறிச்சு ஓடுவானுங்க......

இன்ட்ரோ......போதும்னு நினைக்கிறேன்.....எதுக்கு வெய்ட் பண்ணிக்கிட்டு......

கிளம்புங்கையா..............அஹ் ஹா....

அட என்ன குறுகுறுகுறுனு பாக்கறீங்க.............

கிளம்புங்கப்பு....பட்டைய கிளப்புங்க.............

ஞாயிறு, 7 செப்டம்பர், 2008

பிசினஸ் ப்ராசெஸ் ல ஒரு டவுட்..........

சார் .....இந்த பிசினஸ் ப்ராசெஸ் ல ஒரு டவுட்..........

இப்படித்தான் நான் கேக்ரான் மேக்ரான் கம்பெனி ல வேலை பார்க்கும் பொது ஒரு மேனேஜர் என்ன பாத்து இப்படி கேட்டார்........அப்போ.....நான் ஒரே ஆளு டோட்டல் பிசினஸ் எ தூக்கி நிறுத்தினேன்..... (அஹ் ஹா.........)

சார் இன்னைக்கு கிளைன்ட் கிட்ட இந்த பிசினஸ் ப்ராசெஸ் பத்தி எக்ஸ்ப்ளைன் பண்ணனும் சார்........அதான் உங்ககிட்ட டவுட் கேக்கலாம்னு.......

கரெக்ட்....இதே தான் அவரும் கேட்டாரு......ரொம்ப அர்ஜென்ட்னு வேற சொன்னாரா.....இத சொல்லும்போது தான் இன்னொன்னு ஞயாபகம் வருது......அவருக்கு ரெண்டு பொண்ணுங்க ஒரு பொண்ணு நல்ல படிக்கும் ....இன்னொன்னு சுமாரா படிக்கும்.... (ஸ்டார்ட் பண்ணிட்டாரு இனிமே வேலைக்காகாது......)

சார் உங்களுக்கு இந்த டவுட் எல்லாம் மெயில் ல அனுப்றேன் சார்.......எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...........

இப்படித்தான் நைன்டீன் எய்ட்டில ஒரு மெயில் எனக்கு வந்தது.....From அட்ரசும் இல்ல To அட்ரசும் இல்ல..........

அய்யோ.....சார் நான் சொல்லறது மைக்ரோஸாப்ட் அவுட்லுக் மெயில் சார்........

அவுட்லுக் னு சொன்னதும் ஞயாபகம் வருது ....நான் எப்பவும் ட்வென்டி தௌசண்ட் மேல தான் டிரஸ் வாங்கி போடுவேன்.....அப்போ நம்ம ஊர்லையே பெரிய டய்லேர் கிட்ட தான் ஸ்டிச் பண்ணுவேன் அந்த கடை பேரு அவுட்லுக் தான்......

மைக்ரோஸாப்ட்...னதும் எனக்கு நினைவிருக்கு....ஒரு நாள் பில்கேட்ஸ் கிட்ட இருந்து அவசரமா ஒரு போன்....பட் நான் ரொம்ப பிசியா இருந்தேனா........ஸோ....என்னோட அசிஸ்ட்டன்ட் கிட்ட சொல்லி அட்டென்ட் பண்ண சொன்னேன்........

சார் ....இப்போ புரிஞ்சுது சார்...கம்ப்லிட்டா புரிஞ்சு போச்சு.......மெயில் அனுப்ப தேவை இல்லை ........தேங்க்ஸ் சார் ..... (ஆள உட்டா போதும் டா சாமி........முடியல...)

இப்படித்தான் தேங்க்ஸ் னு எனக்கு கீழ வேலை பார்த்த ஐந்நூறு பேருல ஒருத்தன் சொன்னான்....அப்போ நான் அவன்கிட்ட சொன்னேன் .....தேங்க்ஸ் னு சொல்லக்கூடாது...தாங்க் யு னு சொல்லனும்னு.........அப்ப அந்த ஐந்நூறு பெரும் எழுந்து கைதட்ட்னாங்க..........

(சார்.....தலை சுத்துது.....வாந்தி வரமாதிரி இருக்கு.........உவ்வே......உவ்வே...

--நண்பர் சுருண்டு விழ இன்னொரு நண்பர் அவரை தாங்கி பிடித்த படி .....என்ன சார் ஆச்சு இவருக்கு ?--

இப்படித்தான் நான் நியூயார்க் ல ஏர்போர்ட் ல நின்னுட்டு இருக்கும்போது..............

(பிடித்தவரும் மயக்கத்துக்கு போகிறார்.....)

துடும்...துடும்....டும்..டும் .....

துடும்...துடும்....டும்..டும் .....


இதனால நம்ம கும்மாளம் சனத்துக்கு தெரிவிசுக்கறது என்னன்னா.......நம்ம கும்மாளத்துல ....புதுசா....ஒரு காமெடி கேரக்டர உருவாக்கப்போரோமுங்கோவ்......அதுக்கு நம்ம சனம் அத்தனையும் நாளைக்குள்ள ஒரு நல்ல பேரு ஒன்னு கண்டுபிடிச்சு கொடுக்க கேட்டுகரோமுங்கோவ்........

இதுல நல்ல பேரு சொல்றவங்களுக்கு....பகுமானமா ஒரு வெகுமானம் காத்திருக்கு சாமியோவ்வ்....... துடும்...துடும்....டும்..டும் .....

சனி, 6 செப்டம்பர், 2008

தாம் தூம்

தாம் தூம் பெயர் நல்ல புதுசா கன்டு புடிச்ச பலகாரம் மாதிரி இருக்கு... சரி படம் எப்படி இருக்குன்னு பாத்தா...., கையில வேல் எடுத்து ஜெயம்ல சுத்திகிட்டு இருந்த நம்ம ரவி, நெக்ஸ்டு பாக்ஸிங் பண்ணி பார்த்தாரு, அப்புறம் இந்த படத்துல படிச்சி டாக்டர் ஆயிட்டாறு.... நம்ம கங்கனா ஒரே நாட்டி போங்க... டைரக்டர் ஏதோ கண்ணு முழிச்சி சில பல சைனீஸ் மற்றும் ஆங்கில படங்கள் பாத்திருக்கர்ருனு தெரியுது... ஆனா கொஞ்சம் கஷ்டம் தான்... இது வரைக்கும் ஒரு புள்ளை காக பல பேத்த இந்தியா வுல அடிச்சி கிட்டு இருந்த நம்ம கதா நாயகன், ஏதோ வெளி நாடு சுத்தி பாக்கனும்னு ஆசை பட்டு சொவியெத் பக்கம் போய்ட்டு ... ஏற்கனவே அது சிதஞ்சி கிடக்கு இதுல இது வேற.... இந்தியாவுல சண்ட போட்ட ஷூட்டிங் ஸ்போட் லையே மக்கள் கன்டிக்கிராங்கலாம் அதனால வெளிநாடு போய்ட்டு தள.. சும்மா வா ஒரு ஆளு 100 பெற போட்டு அடிச்சி கிட்டு இருந்த விடுவாங்களா சுராசிக் பார்க்ல டிநோஸர் கூடு சுமார் பாத்து பேர தான் அடிக்கும் அப்படின்னா பார்த்து கோங்க.. ஒரு பாட்டு நல்லா இருக்கு.... மத்த படி எல்லாம் ஹும்ம்ம்... கண்டிப்பா பாக்கணும்... லக்ஷ்மி ராய் காக கண்டிப்பா பாக்கணும்...ஏனா அவங்களும் கொஞ்ச நேரம் வராங்க..... முடிஞ்சா நீங்களும் பார்த்துட்டு கும்மி அடிங்க....

வாங்க......பொங்கல்.....போடலாம் .....

அண்ணே...அண்ணே.....வாங்க பொங்கல் போடலாம் (என்னடா.....வாங்க பழகலாம்னு சிவாஜி ல கூப்பிடறமாதிரி கூப்பிடுறானே....வில்லங்கத்த விடிய காத்தால கொண்டுட்டு வரானேன்னு ....ஜெர்ர்க்கு ஆகிறாரு தலை என்று செல்லமாக அழைக்கப்படும் குருடாயில் குரு).

அப்புறம் தான் சொல்லறான் இது வெண்பொங்கல், சக்கரை பொங்கல் இல்லானே....இது bloggu   பொங்கல்னான்.......

அடேய்....நார்னியா தலையா ஏண்டா காலங்காத்தால உன் டார்ச்சற எங்கிட்ட ஆரம்பிக்கற…....

இல்லைங்க்னே..... பொங்கல்ல ரெண்டு டைப்   இருக்குனே.....பசங்க பொண்ணுங்க கூடவோ ...இல்ல பொண்ணுங்க பசங்க கூடவோ மொக்கை போட்டா அதுக்கு கடலைன்னு சொல்லுவாங்க.....

அதுவேபசங்க, பசங்க கூடவோ , இல்ல பொண்ணுங்க, பொண்ணுங்க கூடவோ பேசினா அதுக்கு பேருதான் பொங்கல்.....இப்ப புரிஞ்சுதா........

(அஹ ஹா..... ஆரம்பிச்சுட்டானே......) டேய் இதெல்லாம் யாருடா உனக்கு சொல்லித்தறது எங்கிருந்து கத்துக்கற……..

அய்யயையே.......நானே....ஒக்காந்து யோசிச்சன்னே.....அதுவும் நம்ம சுணா...விணா எழுதறத படிச்சு படிச்சு மூளை இப்படி வேலை செய்யுதுனே........

டேய் பொங்கல் பண்ணி .....அவிங்கல்லாம் ரெம்ம்ப அறிவாழிங்கடா.....நீ அவிங்க எழுதறத படிச்சுபுட்டு கொஞ்சநஞ்சம் கழண்டு போனது எல்லாம் மொத்தமா கழண்டு மெண்டல் ஆகிடபோறடா.....

போங்கண்ணே உங்களுக்கு பொறாமை…..

சரி இப்போ என்னதான் பண்ண சொல்லற......

வாங்க டி கடைக்கு போவோம்....ஒரு மணி நேரம் பொங்கல போட்டுட்டு ஒன்னு ரெண்டு பஞ்சயதுகள பண்ணி விட்டுட்டு வருவோம்....இதெல்லாம் உங்களுக்கு புதுசா.....ஆங்.....சும்மா வாங்கன்னே...நான் பார்த்துகிறேன்.....(நீ இப்படி நான் வாங்கறதா பார்த்துட்டுதானே இருக்க....)

அடேய்.....வெண்பொங்கல் மண்டையா....எனக்கு வேலை இருக்குடா.....

அப்போ இது உங்களுக்கு வேலை இல்லையா .....பொது வாழ்கைன்னு வந்துட்டா நீங்க சொந்த விஷயங்கள்ல இருந்து கொஞ்சம் ஒதுங்கிகனும் ஆமா.........சரி வாங்க எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க........

அடேய் ஏலியன்ஸ் மூஞ்சி..........உன்கிட்ட எப்படா சொன்னேன் பொது வாழ்கைக்கு வந்துட்டேன்னு....ஏண்டா ஒரு வேட்டி கொஞ்சம் வெள்ளையா கட்டகூடாதாடா.......

போங்கண்ணே.....உங்க கிட்ட இதுதான் புடிக்காது .....தன்னடக்கம் ரேம்ம்ம்பா ஜாஸ்திண்ணே.........

சரி இன்னைக்கு எனக்கு சனி சடை போட்டு பூவு வச்சுக்கிட்டு தலைல உக்காந்துடுச்சு..........சரி வா.....

(டி கடைல ஏற்கனவே ஒரு கோஷ்டி அஞ்சு மணில இருந்து ஒரு லைன் விடாம பேப்பர பொரட்டி எடுக்கறதும்....சிக்கினவன எல்லாம் பொங்கல போட்டும் .....அனுப்பிட்டு இருந்தது இப்போ தலையும் நம்ம பொங்கல் பொன்னுசாமி (ஷார்ட் ஆ PP ) யும் அங்கே போய் பட்டரைய ...போடறாங்க)

டேய் …… தலைவருக்கு ஒரு ஸ்ட்ராங் டி , எனக்கு அப்படியே ஒரு பால் டி போட்டுக்க..........

ரெண்டு பேருக்கும் சுடு தண்ணிதான் மூஞ்சில ஊத்துவேன்....ஓடிப்போயிடுங்க........

ஏய் என்னப்பா தலைவர மரியாதையை இல்லாம பேசிட்டு இருக்க....இந்த இடத்துல கடை இருக்கணுமா வேண்டாமா ? ( பிபி கைய மடிச்சுவிட்டுகறான் )

(அஹ் ஹா.... இன்னைக்கு டி குடிக்க கூட விடமாட்டன் போலிருக்கே ....)

ஏப்பு....சின்ன பையன்......அவன விடப்பு......நீ டீ ய போடூ..........

மொதல்ல காச போடு ....அப்புறம் டி ய போடலாம் உனக்கே டி கிடையாது இதுல கூட அல்லக்கைங்க வேற.............

இந்த பொழப்புக்கு எங்கயாவது பிச்சை எடுத்து பொழைக்கலாம்.... பொளேர்ர்ர்ர்ர்ர்...........ஒரு அறை டி மாஸ்டர் கன்னத்துல விழுந்தது....... பொறிகலங்கி போய் பார்த்த முன்னால நிக்கறவன் எல்லாம் மங்கலா தெரியரானுங்க.... எல்லாரும் யாரு அடிச்சா னு பார்த்தா ...அங்கே ஒரு பிச்சகாரன் ரொம்ப கோவத்துல நிக்கறான்........... எதுக்குடா அடிச்சே....உனக்கு என்ன பய்த்தியமா...? லூசாடா நீயி..........

நீ எதுக்குடா என்ன கேவலமா பேசுன....என் பேங்க் பாலன்ஸ் தெரியுமா?....கிரெடிட் கார்டு கு மட்டும் மன்த்லி .....முப்பதாயிரம் கட்டுறேன் தெரியுமா.......அவன் சொல்லிகிட்டே ...அழுக்கு பைக்குள்ள கைய விட்டு...தேடினான்.... ரெண்டு மூணு கிரெடிட் கார்டு, எ டி எம் கார்டுங்க....கீழ விழுந்தது அதை ஓடிபோய் PP எடுத்து அவன்கிட்ட கொடுத்தான் ...அப்போ இன்னொரு டப்பா கீழ விழுந்தது .......அதையும் எடுத்து அவன்கிட்ட கொடுத்தான் ....இது என்னன்னு தெரியுமா ? .....PP முழித்தான்......டப்பாவை பிரித்து உள்ளே இருந்து ஒரு செல் போன் எடுத்தான்.....அது மாதிரி செல் போன்….. தலையோ ,  PP யோ வாழ்க்கைல பார்த்ததில்ல....ஏதோ....மினி கம்ப்யூட்டர் மாதிரி இருந்தது....அப்போ அவன் சொன்னான் .....இதுதான் ஐ போன் த்ரீ ஜீ..........இந்தியால கிடைக்காது அமெரிக்காவுல இருந்து என் பையன் அனுப்பினான்.....அவன் சொல்லிகொண்டே போக ............தலையும், PP யும் தலை சுற்றி மயங்கி விழுந்தார்கள்.....இப்போதான் அவர்களுக்கும் டி மாஸ்டர் கும் எதுக்காக அறைஞ்சான்னு விளங்க ஆரம்பித்தது ...... என்னைப்போய்  போய் இவன்கூட கம்பேர்  பன்றயே ….அறிவு இருக்கா............(அவன் மாஸ்டர் ஐ அசிங்கமாக திட்ட ஆரம்பித்தான்)…..... தலை மெதுவா திரும்பி PP ஐ பார்க்க அவன் நைஸா நழுவ ஆரம்பித்தான்….....

டேய் நாய் கரண்ட மண்டையா ....நன்னாரிப்பயலே ...... சும்மா இருந்தவன கூட்டிட்டு வந்து பிச்சகாரங்க்கிட்ட அசிங்கப்பட வச்சிடியேடா……......

டேய் நில்லுடா……....

…….நிக்கமாட்டேன் நின்னா கல்லால அடிப்பீங்க……

……. டேய் நிக்கலனாலும் அடிப்பேண்டா…………

…….எங்க போனாலும் உன்ன விடமாட்டேன்டா..... (வேட்டி அவிழ்ந்து விழுவது தெரியாமல் துரத்திக்கொண்டு PP பின்னால் தலை தலை தெறிக்க ஓடிக்கொண்டு இருக்கிறார் .....).

அந்த பிச்சைக்காரன் குடித்த டீ கு காசு சரியாக கொடுத்துவிட்டு எதிர் திசையில் அமைதியாக நடந்தான்………..

வானம் மேகமூட்டம் இல்லாமல் தெளிந்து காணப்பட்டது...........

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

கிறுக்கல்கள்-2

உன்னை காண காத்திருக்கும் கண்களுக்கு

உன்னை கானது போனால் வலிகள் அதிகம்....

அந்த வலிகள் கண்களுக்கு மட்டும் அல்ல

இதயத்துக்கும் தான்...

வியாழன், 4 செப்டம்பர், 2008

இன்று ஒரு வினா ?

ஹாய் டமில் கய்ஸ்.....!!!!....

வழக்கமாக ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்பார்கள்..for a Change.. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கில வார்த்தைகளை சொல்லுங்க.....

சரியான விடைகளை SMS செய்ய வேண்டிய Format <கும்மாளம்> space  <>  

1. தீர்வு மேலாளர்.

2. நிலைய பராமரிப்பு.

3. விற்பனை& விநியோகம்.

4. உற்பத்தி பழனுதல்.

5. திட்ட நிர்வாகி.

6. நிதி&கட்டுப்பாடு.

7. பொருள் நிர்வாகம்.

8. முன்னேறிய தொழில் பயன்பாட்டு திட்டம்.

9. தொழிற்த்துணிபு வலைவாசல்.

10.பரிமாற்ற உள்கட்டமைப்பு.

11.வர்த்தக நுண்ணறிவு.

12.அடிப்படை நிர்வாகம்.

13.ஆவண நிர்வாக கட்டமைப்பு.

14.தர நிர்வாகம்.

15.பணிப்பாய்வு.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


புதிய தத்துவம் 2

கும்மிடி பூண்டில குப்புற உழுந்தாலும் .......மன்னார் குடி ல மல்லாக்க உழுந்தாலும் ....ஒடைய போறது என்னமோ பள்ளுதான்..........

யாரு இந்த ஜென்னா ஜேமிசன்?

இந்த கேள்விய போதைல இருக்கறப்போ தெரியாம கேட்டுட்டேன் ...அதுவும் வெள்ளகாரண்ட... இத கேட்டதுக்கு தான் வடிவேலு காமெடி பாத்த மாதிரி சிரிச்சிடானுவ....சரி யாரோ பிரைம் மினிஸ்டரொ ப்ரெஸிடண்டோ நமக்கு தெரியலன்னு நெனச்சேன்..அப்புறம் தான் தெரிஞ்சுது இது காமடி மேட்டர் இல்ல காமவெடி மேட்டர்னு. சரி கொஞ்சம அவங்கள பத்தி சொல்லுங்கடான்னு கேட்டா ..உஜாலா பட(டு)வுலகின் உச்ச நாயகி, மேட்டர் படங்களின் மகராணி அப்டி இப்டி னு பீலா உட்ராங்கே. சரி புகழ்ந்தது போதும் வாழ்கை வரலாற கொஞ்சம் சொல்லுங்கடானேன். அவங்க பதினெட்டு வயசுல இருந்து இந்த சேவைய செஞ்சிகிட்டு இருக்காங்க , இப்போ அம்பது வயசாகுது இன்னமும் அவங்க கலைப்பசி அடங்கலேன்னும், அம்மணி சேவை நாட்டுக்கு தேவைனு உலக ஆண்வர்க்கம் அவங்களுக்கு கன்னாபின்னானு ஆதரவு அளிப்பதாகவும் தெரிஞ்சிகிட்டேன். மனுஷனுக்கு ஞானம் வரப்போ ஒரு ஒளி வரும்னு சொல்வாங்க அது மாதிரி அவன் இந்த விஷயத்த பத்தி சொல்றப்ப அவன் மொகத்துல ஒரு தவுசண்ட் வாட் வெளிச்சம் தெரிஞ்சுது. இந்த ஜென்மம் எடுத்ததே இதுக்காக தாங்கற மாதிரி ஒரு பெருமை. ஒரு தலைமுறையே இவங்கள பாத்து வளந்திருக்குனு தெரிஞ்ச உடனே ரொம்ப ஆர்வமாகி சரி இன்னைக்கு எப்படியும் இத்த பாத்ரனும் இல்லாட்டி நம்ம எதிர்கால சந்ததிகள் நம்மள காரி துப்புமேன்னு அவன்டயே கேட்டேன். அவனும் ஒரு ஹர்ட் டிஸ்க் குடுத்து இத பாத்து இவங்க புகழ நீயும் பரப்புனு சொல்லிட்டு போய்ட்டான். கால் நூற்றாண்டுகளாக இளைஞர்களை துரும்பாக்கிய அந்த தெய்வீக படைப்பை நானும் பார்த்தேன்....ஆஹா அற்புதம் ..அந்த அனுபவத்த விளக்க வார்த்த இல்ல... உடனடியா அகில உலக ஜென்னா ரசிகர் மன்றத்துல என்னையும் இணைச்சுகிட்டேன், எப்படியோ நானும் இந்த நாட்டுல வாழ்றதுக்கான பல தகுதிகள்ள ஒரு தகுதிய பெற்றுடேன். மோட்சத்தை நோக்கிய எனது பயணத்தில் இது ஒரு குறிப்பிடதக்க மைல்கல். ஆனா இந்த பயணத்தை ஆரம்பிச்சு வெச்ச நம்ம ஊர் ஷகிலாவ அடிச்சிக்க முடியாதுங்கறது என்னமோ உண்மை......என்ன சொல்றீங்க பாஸ் ?..

மாப்பு வச்சிட்டாங்க ஆப்பு!!!

நாம்பாட்டுக்கு சவூதி அரேபியா. செவனேன்னு பெஞ்சுல outlook ,Youtube , orkuttum மட்டுமேப் பர்த்த்கிட்டு உக்காந்திருந்தேன்...
திடீர்னு ஒரு PM மெயில் பண்ணி மச்சி ஒரு project இருக்கு சேந்துக்கிறியானுக் கேட்டான்..நானும் சரின்னு சொன்னது வம்பாப் போச்சு..
அவன் பெங்களூர்ல ஒரு PMக்கு போனப்போட்டு இங்க ஒருத்தன் சிக்கியிருக்காண்டா வாடா அலம்பிரலாம்னான்...
அதுக்கு அவன் சொன்னான் அவன இங்க அனுப்புடா நான் பாத்துக்கறேன்னு...
ஒரு Flight ல் ஏத்தி என்ன பெங்களூருக்கு அனுப்பினாங்க..நானும் வெயில் காலத்துல குளுகுளுன்னு இருக்குமேன்னு நம்ம்ம்ம்பி...பெங்களூருக்கு வந்துட்டேன்...
இங்க டீம்ல ஒரு 20 பேரும்மா...
எல்லாப் பயலுகளும் மூச்சுத் தெணற தெணற வேலை செய்யறானுங்க...outlook um orkuttum மட்டுமேப் பார்த்த எனக்கு இது புதுசா இருக்கு...என்னோட PL வேற அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு modules-aiyum எங்கிட்டத் தள்ளி விட்டாரு...
நானும் எவ்வளவு நேரம் தான் configuration பண்ற மாதிரியே நடிக்கிறது?(உங்களால முடியலன்னா தெரியாதுனு சொல்லிட வேண்டியதுதான?)நான் எப்பவும் வேலைய செய்யாம மெயில்,Youtube , orkuttum பண்ணிட்டே இருக்கிறத பார்த்துட்டு என்னோட PL "எவ்வளவு வேல கொடுத்தாலும் இவன் மெயில்,Youtube , orkuttum பண்ணிட்டே இருக்கான்...
 இவன் ரொம்ப நல்லவன்"னு சொல்லிட்டாருமா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

புதன், 3 செப்டம்பர், 2008

சிங்கத்த சீண்டிப் பார்ப்போமா...?


நம்ம சங்கத்து பெரிய சிங்கத்த புரிஞ்சிக்கவே முடியல...

"வல்லரசு" படத்த DVD ல பார்த்துட்டு நம்மள உசுப்பி விட்டுடுச்சி... இங்க அவனவன் நைட் தூக்கத்துல பதிவு, பின்னூட்டம், முன்னோட்டம் னு பினாத்திக்கிட்டு இருக்கானுங்க...

அடிக்கடி குகை வாசல்ல போர்ட மாத்திகிட்டே இருக்கு...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி வாசல்ல த.மா.சு (DMS) கன்சல்டன்ட் னு போர்டு மாட்டியிருந்திச்சு...

அந்த சமயத்துல திடீர்னு கூட்டமா யார் யாரோ வருவாங்க... சிங்கத்த சுத்தி நின்னு கசமுசானு எதோ பேசுவாங்க... கொஞ்ச நேரத்துல பாத்தா அந்த பதினோரு பேரும் மூணு மணி நேரத்துக்கு சிங்கத்த குத்தகைக்கு எடுத்திருப்பாங்க...
ஏதாவது ஒரு ட்ரெய்னிங் ரூமுக்குள்ள சிங்கம் ஒரு PPT ய நாலாவது தடவையா ஓட்டிக்கிட்டு இருக்கும்.

சரி துக்கம் விசாரிக்கலாம்னு உள்ள போனா அதுல பாதி பேரு Youtube ல சீரியஸ்ஸா எதையோ தேடிக்கிட்டு இருப்பானுங்க. இல்லன்னா வட்டமா உக்கார்ந்து Al-Baik சிக்கன் வெட்டிகிட்டு இருப்பானுங்க...

நமக்கு சிங்கத்தோட விருந்தோம்பல் எப்பவுமே பலமா இருக்கும்... (நாம உள்ள போனதே அதுக்கு தான...)

அவிங்களும் நம்ம பலவீனம் தெரியாம "கம் ஆன் மேன்! டேக் இட்! " னு சொல்லிட்டு பின்னாடி வருத்தப்படுவாய்ங்க...

ஒரு நாள் SD ட்ரெயினிங்ல சரக்கு முடிஞ்சி போயி என்ன பண்றதுன்னு தெரியாம சிங்கத்த வந்து கூப்பிட்டாங்க...

இப்போ திடீர்னு வந்து சொல்றீங்க...?
நா இன்னும் Configuration னே ஆரம்பிக்கல...
அதுக்கப்புறம் டெஸ்ட் பண்ணனும்... Document ரெடி பண்ணனும்... ன்னு என்னென்னவோ சொல்லி பார்த்துச்சி...

"ஜோக் அடிக்காதீங்கண்ணே அதெல்லாம் மெதுவா பார்த்துக்கலாம்... இப்போ வந்து ட்ரெயினிங் மட்டும் எடுங்க போதும்" னு கூலா சொல்லி அழைச்சுட்டு போனாங்க...

"நீங்கதாங்க எங்க Quality Consultant னு அந்த ஆண்டவனே சொல்லிட்டான்னு சொல்லி சிங்கத்து வயித்துலேயே புளியை கரைச்சும், சிங்கம் அசரல... ஏற்கெனவே இருந்த போர்டுக்கு கீழேயே கொல்டி மேனேஜ்மென்ட் னு இன்னொரு போர்டு போட்ருச்சி...

அதுக்கப்புறம் இப்படி ஒரு ஆள் இருக்கற மேட்டர் நம்ம கம்பெனில எப்படியோ பரவி, 'பெரிய தல' வரைக்கும் விஷயம் போய்டுச்சு...

நேரா சிங்கத்துகிட்ட வந்த ''பெரிய தல' " ஆமா உங்க SAPல Solution Manager னு புதுசா ஒரு module வந்துருக்காமே அப்படியா?" னு பிட்ட போட்ருக்கு...

"ஆமா நானும் எங்கேயோ படிச்சிருக்கேன்" னு சிங்கம் எதேச்சையா சொல்லப்போக...

"இத ஏன் நீங்க எங்கிட்ட முன்னாடியே சொல்லல..?" னு ''பெரிய தல' செல்லமா கோவப்பட்டுச்சாம்.

மறு நாள் காலைல சிங்கம் குகை வாசல்ல சுத்தியலோட "கரைச்சல் மேலாண்மை" னு இன்னொரு போர்டு ரெடி பண்ணிக்கிட்டு இருந்துது...

சிங்கம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குதான்னு சோதிச்சு பார்க்க நெனச்ச நம்ம சின்ன தல ( அவருக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன... ) Streeing committee meeting க்கு மொத நாள் KT ரெடி பண்ணி சிங்கத்துக்கு மெயில் பண்ணிட்டு ஊருக்கே CC போட்டுட்டு லாங் லீவுல போய்ட்டாரு...

அந்த ரெண்டு வாரத்துக்கும் கம்பெனி மொபைல் போன்ல கால் வரும்போதெல்லாம் சிங்கத்துக்கு தூக்கி வாரி போடும்.

இப்போ சிங்கம் Multifunctional Consultant ஆய்ட்டதால அத வெளிநாட்டுக்கு அனுப்பி ( சவுதிக்கு இந்தியா வெளி நாடு தான...) "Solution Manager" ல டிரெயினிங் குடுக்கலாம்னு கம்பனில முடிவு செஞ்சாங்க...

சிங்கமும் " சக்சஸ் ! " னு சொல்லிகிட்டே Flight ஏறிப்போச்சு...

டிரெயினிங் முடிச்சி வந்த சிங்கம் "கண்ணன்... BASIS ல என்ன டவுட் இருந்தாலும் எங்கிட்ட கேளுங்க..." னு சொல்லிக்கிட்டு இருந்தது...

எனக்காக எனது செல்லம் கிறுக்கியவை...!!!!

உனது கண்கள் பார்க்கும் தொலைவில் நான் இல்லை என்றாலும் நீ நினைத்து பார்க்கும் அளவில் உன் இதயத்தில் இருக்கிறேன்...!!!

வாழ்க்கை

என்னதான் பெரிய துணிக்கடைக்கு முதலாளியா இருந்தாலும், அவருக்கு குழந்தை பொறந்தா துணி இல்லாமத்தான் பொறக்கும்!!! இதுதான் உலகம்...இதுதான் வாழ்க்கை...!!!!

வணக்கம்...பா.....!!!!

நண்பர்களா....வணக்கம்...பா.....!!!!

செவ்வாய், 2 செப்டம்பர், 2008

இன்று ஒரு தகவல்!

சிரஞ்சீவி இன் புதிய கட்சிக்கு போட்டியாக.. மூன்றாவது அணி உருவாக்க முயன்றவர்கள், முயற்சி பலனில்லாமல் புதிய கட்சி ஒன்டரி துவங்கி உள்ளனர். கட்சியின் பெயர் - அல்லகை முன்னேற்ற கழகம்!
இக்கட்சியில் சேர முனைவோர்.. சமையர் கட்டு பக்கமாக சென்று பெயர் பதிவு செய்யலாம்...

இப்படிக்கு,

கும்மாளம் இன்று ஒரு தகவல் குழு..

(குறிப்பு : தகவல் NTI ஆல் உறுதி செய்யபட்டது )

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008

இந்தியா வல்லரசு ஆகுமா - பாகம் 2

நேத்தி கும்மு கும்முநு கும்மி அடிச்ச அப்புறம்... இந்தியா வல்லரசு ஆகும்னு தெரிஞ்சிக்கிற ஆர்வத்துல நேத்தி சிந்தி சிதறுன மக்களை இன்னிக்கி பொறிக்கி எடுத்து கேள்விய போட்டோம்.... இன்னிக்கிn முதல்ல நாட்டமை நரசிம்மன் கிட்ட கேடோம்... கேள்வி கேட்டவுடனே ஆள காணோம் எங்கடாநு பார்த்தா.... மின் அஞ்சல் அதாங்க மெயில் அனுப்ப போய்ட்டாரு... அதாவது இந்த விசயத்த எல்லாருக்கும் தெரிவிக்கிராராம்.... நடதுங்கட... நடத்துங்க...அப்பனு பார்த்து ஒரு தொலைபேசி அழைப்பு .... எதிர் முனைல நம்ம பய... சரி அவன்ட கேட்போம்னா நீ கொஞ்ச நாள் இந்தியா பக்கம் வராம இரு இந்தியா சீகிரமம் வல்லரசு ஆயிடும்னு அசிங்க படுத்திட்டு போன வெச்சிடான்...... அந்த சமயம் பார்த்து நம்ம XI சான்றிதழ் பெற்ற வொர்க்ப்லொ காங்சுல்டன்ட் வந்தாரு.. சட்டுன்னு அவர்ட கெட்ட.. இந்தியா வல்லரசு ஆயிட்டாளும் அப்படின்னு ஒஎஉ பெரிய சலிப்பா சலிச்சி கிட்டு போய்ட்டாரு...
அந்த நேரம் பார்த்து உள்ள வந்த மேலாளர்.... ஏன்டா குடுத்த வேலைய செய்யாம இங்க எங்கடா சுத்தி கிட்டு இருக்கனு சொல்லி ஆபீஸ் ரூம் அதாங்க சிவாஜி படத்துல வருமே அங்க கூட்டி கிட்டு போய்ட்டாரு... இந்தியா வல்லரசு ஆகுமா ஆகுமாநு என் கேள்வி என்ண்டயே திரும்ப திரும்ப கேட்டு கும்மி அடிச்சிட்டாரு..... அனா வளைய மக்களே.... கருதாவதாரம் சொல்லியோ... டி கடைல புரளி பேசியோ இந்தியா வல்லரசு ஆவாது..... நம்ம நம்ம வேலைய மட்டும் பர்திருந்தோம்னா இந்தியா எப்போவோ வல்லரசு ஆயிருக்கும்.... இனிமே ஆவும்னு நம்பிக்க இருக்கா என்ன.......

கருத்தாவதாரம் ...

ரங்கராஜ நம்பி: சனநாயகம் அரியையும் சிவனையும் விட சக்தி வாய்ந்தது என்று மக்கள் ஒப்பு கொள்ளும் போது இந்தியா வல்லரசு....

Fletcher: Super Power..?..India?...Are you joking? man you are a Freakin Joker..aren't you?

Bush: This is a complicated question..with the vision of a new strategic partnership i would suggest them buying our F22's and signing the civilian Nuclear agreement which would emphatically give them that Status..

கிருஷ்ணவேணி பாட்டி: வல்லரசா... அதென்ன பெருமாள் பிரசாதம்னு நினைச்சியா வரிசைல நின்னோடானே கிடைகறதுக்கு ...அது பகவான் ஆண்ட வரம் வாங்கற மாதிரி ரொம்ப கஷ்ட படணும்ட அம்பி ..

பல்ராம் நாயுடு: நம்ம சிரஞ்சீவி காரு politics ல வசாறு ..இனிமேல்லு ஆந்த்ரா நாடு தமில் நாடு எல்லா நாடு வல்லரசு ஆகுது...

அவதார் சிங்: நம்ம நாடு வல்ரசு ஆக்ரத் நம்ம கைலே தான் இருக்கு...இந்த மாதிரி Blog எழுத்தே டைம் வேஸ்ட் பண்ணாமே ஒழுங்கா எல்லாரும் வேல பாக்ணும்..நன்றி ஹய்..

கலிபுலாகான்: இன்ஷா அல்லா..நம்ம வாப்பா எப்பவும் சொல்றாரு சார் இந்தியா வல்லரசு ஆகனும்னா நெறைய உற்பத்தி பண்ணனும்னு .. மே க்யா கர் ஸக்த ஹும் சாப்?.. அதான் நான் இப்பவே நெறைய பொண்ணு பாத்து வச்சுருக்கேன்...என்னால் முடுஞ்ச அளவுக்கு இந்தியாவ வல்லரசு ஆக்குவேன்...சரூர் சாப்..

ஷிங்கேன் நரஹஸி: India should face a war..war is the only way for the people to unite and be patriotic...

பூவராகவன்: ஏல இதென்ன சலூன்ல கட்டிங்கா ஷேவிங்கான்னு கேக்கது போல..இந்தியா வல்லரசாகுமான்னு கேட்டுடியே மக்கா ...அன்னா மோட்டு வளைய பாத்துட்டு முட்ட சொரிஞ்சிட்டு இருக்கான் பாரு..அவனுக்கு எல்லாம் எப்ப புத்தி வருகோ ..அன்னைக்கி இந்தியா வல்லரசா ஆகும்ல..

கோவிந்து ராமசாமி: இந்தியா வல்லரசு ஆகறது ..i wont say its impossible...Like what Aristotle told "To say of what is that it is not, or of what is not that it is, is false, while to say of what is that it is, and of what is not that it is not, is true"....நான் இந்தியா வல்லரசு ஆகாதுன்னு சொல்லல ...ஆனா நல்ல இருக்கும்னு தான் சொன்னேன்...

கொஞ்சம் அதிகமா சிந்திக்கிறோமோ...



மச்சான்... இந்தாடா டீ.


தேங்க்ஸ்டா...

டேய் எனக்கு ஒரு சந்தேகம்டா.

ஒன்ன பத்தி எங்களுக்கு தெரியும்... எதுவா இருந்தாலும் டீ சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்பறமா கேளு.

இல்ல மச்சான்... இந்தியா வல்லரசு ஆகுமாடா?

டேய் ஏன்டா இப்படியெல்லாம் சிந்திச்சி பழகறீங்க? என்னக் கொஞ்சம் புடிங்கடா. என்னமோ பண்ணுது.

இல்லடா, நம்ம நண்பர் ஒருத்தர் கேட்டுட்டாரு.

அதான பார்த்தேன்...

நாம பதில் சொல்லலேன்னா நல்லா இருக்காதுல்ல.

நீ பதில் சொன்னாலும் நல்லா இருக்காது தான். ஏன்டா ஓசி டீ வாங்கி தந்ததுக்காக நீ என்ன வேணும்னாலும் கேட்டுர்றதா? சரி மத்தவங்க என்ன சொல்றாங்க?

இன்னும் யாரும் பதில் சொல்ல ஆரம்பிக்கல. எல்லாரும் நம்மள மாதிரி தான்னு நெனைக்கறேன்.

சரி நீ என்ன நெனைக்கற?

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 2020 ல இந்தியா வல்லரசு ஆகிடும்னு சொல்லி இருக்காரே!

ஆமாண்டா அவரெல்லாம் ரொம்ப படிச்சவரு, பெரிய விஞ்ஞானி. சொன்னா சரியா தான் இருக்கும். அதையே நீயும் சொல்லிடு.

ஆனா NASA விஞ்ஞானிகள்லாம் 2019 ல ஒரு பெரிய விண்கல் பூமில விழுந்து உயிரினம்லாம் அழிஞ்சிடும்னு சொல்றாங்களே!

அப்படியா ? அது கூட உண்மையா இருக்கலாம் அவங்களும் படிச்சவங்க தான.

ஆனா இந்த நாஸ்ட்ராடமஸ் னு ஒருத்தர் 2016 க்கு அப்புறம் இந்தியா தான் வல்லரசுன்னு 500 வருஷத்துக்கு முன்னாலேயே அடிச்சு சொல்லி இருக்காரே!

ஓஹோ... அவர் பெரிய ஆளாச்சே.

ஆமா... ஆனா ஒரு சில பொருளாதார வல்லுனர்கள் 2015 ல சீனா தான்னு சொல்றாங்க.

டேய் வேண்டாண்டா... டீக்கு வேணும்னா என்னோட அக்கவுண்ட்ல எழுதிக்கோ. முடியல.

இருந்தாலும் இந்த போரிஸ்கா னு ஒரு செவ்வாய் கிரகத்து பையன் சொல்றத பார்த்தா 2012 லேயே ஒரு பெரிய இயற்கை பேரழிவு இருக்கும் போல தெரியுதே!

தப்புதாண்டா... இந்த ஒரு தடவ மன்னிச்சி விட்டுடேன்...

அதுக்கில்ல மச்சான் நம்ம சிதம்பரம் என்ன சொல்றார்னா 2010ல...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

சனி, 30 ஆகஸ்ட், 2008

இந்தியா வல்லரசு ஆகுமா !!!!

இது ஒரு நல்ல கேள்வி.....


இந்தியா வல்லரசு அகுமான்னா... ஆகும்... ஆகாதான்னா ஆகாது....


இது ரொம்ப சிரமமான கேள்வியா இருகுரதுநால உன்னதமா பணி புரியுற நம்ம சாப் காங்சுல்டன்ட் கான்ச்ஸல்ட் பண்ணினோம்...


முதல்ல நம்ம டோங்க்ரி தல, பொருட்கள் மேலாண்மை பிரிவு அதாங்க நம்ம இது... புரியளனா விடுங்க..... என்ன சொன்னருன்னா .... அதாவது சுமார் ௨௫ வருடங்களுக்கு முன்பாக அவரு சாப் ல வேல பர்தப்பைல இருந்து இத தன் சொல்றாங்க ஆனா இன்னும் ஆகல.... (ரொம்ப வருத்த படுராருய்யா)...அதுமட்டும் இல்லாம இந்தியா வல்லரசு ஆகுறதுக்கு சில குறிப்பு குடுத்தாரு.... அத கேட்குறதுக்கு இந்தியா வல்லரசு ஆகமலே இருக்கலாம்னு தோநுது.




சரி இவரு தன் இப்படி சொல்லிட்டாரு நம்ம கல்லாபெட்டி சுந்தரம்.. ஆதங்க நம்ம விற்பனை பிரிவு ஆளு .... அவர்ட கேட்டா .... குரங்கு குட்டி மாதிரி மூஞ்ச வெச்சிகிட்டு ஒரு கேள்வி கேட்டாரு.... அதுல எல்லாமே அடக்கம்னா பர்துகொங்களேன்.... நமக்கு என் இது தோனல நு எல்லாரும் பொறாமை படுற அளவுக்கு இருந்துச்சு அந்த கேள்வி... வல்லரசுன்னா ??



சரி இதுக்கெல்லாம் சரியான ஆளு , உற்பத்தி பிரிவ சேர்ந்தவரு, நல்லவரு, வல்லவரு நம்ம மாம்ஸ் கெட்ட "What shall I say?" இங்கிலீஷ் , நம்ம கிட்ட.. போய யோவ்...



அட என்னடா இது, இப்படி ஆயிடுச்சே, தரத்தை கக்கும் ஆண்டவர் கிட்ட கேட்போம்னா , அவரு நம்மள ஊறுகாய் ஆக்கி , கூட வேல பாக்குற பாபாவ தொலைபேசில தொடர்பு கொண்டு கடலைய அரம்பிச்சிடாறு.. என்ன கொடுமை சார் இது....
இதுக்கு நடுவுல சும்மா போறவன் ஒருத்தன் என்ன நடக்குதுன்னே தெரியாம நம்ம விஜயகாந்தே வல்லரசு ஆகும் பொது இந்தியா என் அக கூடாதுன்னு கேட்குரார்....

இன்னிக்கி இவ்ளோ போதும் மீதி கும்மிய நாளைக்கு அடிப்போம்னு தண்ணிய குடிக்க ஓடிட்டேன்...







வல்லரசு ஆகுமா இந்தியா....?

வல்லரசு ஆகுமா இந்தியா....?

உங்கள் பதில்.....

ஆம் ....என்றால் ஏன் ?...

இல்லை....என்றால் ஏன் ?...

காரசாரமான விவாதத்தை ஆரம்பிங்க....

கருத்துகளை நறுக்கு தெறித்த மாதிரி அனுப்புங்க...

புதன், 27 ஆகஸ்ட், 2008

சத்யம் - திரை விமர்சனம்

சத்தியத்த மட்டும் சொல்றோம் படிச்சு பாருங்க.
http://www.geocities.com/kracker2000in/index.html

கும்மாளத்திற்கு நன்றி .......

என் இனிய வலைய மக்களே.....!

என் இனிய வலைய மக்களே.....!

கும்மாளம் மூலமாக உங்களுக்கு கருத்துக்களை அள்ளி கொட்ட புறப்படுங்கள்...

கும்மாளம்......

கும்மாளம்......இது சும்மா கும்மாங்குத்து போட்டு கூட்டஞ்சோறு செய்வது இல்ல...

கும்மிருட்ல குட்டியா ஒரு தீபொறி இருந்தாலும் குபீர்ர்ர்...னு... கண்ணுக்கு தெரியும்ல அதுபோல...

குருடர்களுக்கு கைதடியை போல மன குருடர்களின் கண் திறக்கும் ஒரு குருட்டு முயற்சி....

கும்முன்னு உங்கள் கருத்துக்களை குதற இல்ல..சிதற விடுங்க......

குளிர்ச்சியாய் சிலிர்கட்டும் வலையர்கள் குஷியாக .....

குமுறி...ச்சீ.....கும்பிட்டு கேட்கும் உங்கள்.......

தியாகு......

Note: (வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைல் ல படிக்கவும் )

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2008

May be this is the first on without fun!!!

Hi folks!!

Hope you will have a nice time in reading this blog here after...

With all your support and contribution!!

Kummalam poduvomgo!!